Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வெளிநாடு புறப்படுவதற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்காகத்தான் இந்த பயணம். நான் நேரில் சென்று அழைத்தால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வருவார்கள்.
நான் ஒன்றும் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும், பொருளாதரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் இந்த பயணம் என கூறினார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இதுவரை சொன்னதில்லை. நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின். அரசுமுறைப் பயணத்தை சொந்த பயணம் என சொல்வது தவறான கருத்து என்றார்.